சட்டவிரோத துப்பாக்கியுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் கைது
#Arrest
#Weapons
#Sri Lankan Army
#officer
Prasu
10 months ago
கொழும்பு - பிலியந்தலை பிரதேசத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் ஆவார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
