கொழும்பில் லாரியை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் - இறுதியில் நடந்த துயரம்!
#SriLanka
#Accident
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
10 months ago
மொரட்டுவையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற லாரி, அதே திசையில் சென்ற மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கல்கிஸ்ஸை பகுதியில் நேற்று (11) மதியம், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
லாரி ஓட்டுநரை முந்திச் செல்ல முயன்றபோது, மோட்டார் சைக்கிள் லாரியின் இடது பக்க நடுப்பகுதியில் சிக்கிக் கொண்டது. மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் லாரியின் இடது பக்க பின்புற சக்கரத்தின் கீழ் சிக்கி படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அவர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். சம்பவத்தில் உயிரிழந்தவர் கல்கிஸ்ஸை ஸ்ரீ தர்மானந்த மாவத்தையைச் சேர்ந்த 75 வயதுடையவராவார்.
சம்பவம் குறித்து கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
