கொஸ்கொட பகுதியில் துப்பாக்கிச்சூடு - 24 வயதுடைய இளைஞர் படுகாயம்!
#SriLanka
#GunShoot
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
4 hours ago

கொஸ்கொட பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். கொஸ்கொட சந்திக்கு அருகில் முச்சக்கர வண்டியில் இருந்த நபர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். .
கொஸ்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹதரமன்ஹந்திய பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 24 வயதுடைய இளைஞர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்களின் அடையாளங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.
சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்வதற்காக கொஸ்கொட பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



