இரத்தப்புற்று நோய்: யாழ்.வடமராட்சியில் மாணவி உயிரிழப்பு
#Jaffna
#Death
#College Student
Lanka4
5 hours ago

இரத்தப்புற்று நோய் காரணமாக யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த மாணவியொருவர் கொழும்பில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு மகரகம தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி நேற்று மாலை 5:00 மணியளவில் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரணவாய் மூத்த விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்த 19 வயதான சுகந்தன் பூமிகா என்ற என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். இச் சம்பவம் கரணவாயில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.



