தெஹ்ரானில் இறுதி ஊர்வலத்திற்காக ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கானோர்

#people #Attack #Iran #Scientist #Official #mourning #funeral
Prasu
11 months ago
தெஹ்ரானில் இறுதி ஊர்வலத்திற்காக ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கானோர்

ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் கடந்த 13ந்தேதி திடீரென தாக்குதலில் ஈடுபட்டது. 100கும் மேற்பட்ட இடங்களை இலக்காக கொண்டு, ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இதில், ஈரான் புரட்சி படை தளபதி உசைன் சலாமி மற்றும் அணு விஞ்ஞானி பெரேதூன் அப்பாஸி உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர். 

30க்கும் மேற்பட்ட மூத்த பாதுகாப்பு அதிகாரிகள், 11 மூத்த அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், உயிரிழந்த பாதுகாப்பு அதிகாரிகள், அணு விஞ்ஞானிகள் உள்ளிட்டோரின் இறுதி ஊர்வலம் நடந்தது.

தெஹ்ரானில் உள்ள ஆசாதி சதுக்கத்தில் அவர்களுடைய புகைப்படங்கள் மற்றும் தேசிய கொடிகளுடன் சவப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டன. இறுதி ஊர்வலத்தில் ஈரான் ஜனாதிபதி மன்சூர் பெஜஸ்கியான் மற்றும் புரட்சி படையின் தலைவர் குவானி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இதேபோன்று, நாட்டு மக்கள் ஆயிரக்கணக்கானோரும் கலந்து கொண்டனர். அவர்கள் கொடிகளை அசைத்தபடி காணப்பட்டனர். ஒரு சிலர் சவப்பெட்டியின் அருகே சென்று தொட்டு விட்டு வந்தனர். சிலர் ரோஜா இதழ்களை தூவினர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1751139320.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4