ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது
#SriLanka
#Arrest
#Fraud
#Airlines
Prasu
3 hours ago

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, விமான கொள்முதல் தொடர்பான இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு, ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவின் சகோதரரான விக்ரமசிங்க, தேசிய விமான நிறுவனத்திற்கு தலைமை தாங்கியபோது, செய்யப்பட்ட பல மில்லியன் டாலர் விமான ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



