மியன்மாரில் $300 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத போதைப்பொருட்கள் அழிப்பு
#government
#drugs
#Myanmar
#destroy
Prasu
3 hours ago

யான்மரின் முக்கிய நகரங்களில் பறிமுதல் செய்யப்பட்ட கிட்டத்தட்ட $300 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத போதைப்பொருள் மருந்துகள் அழிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவின் கோல்டன் முக்கோணப் பகுதியிலிருந்தும், குறிப்பாக மியான்மரின் கிழக்கு ஷான் மாநிலத்திலிருந்தும் முன்னெப்போதும் இல்லாத அளவிலான மெத்தம்பேட்டமைன் உற்பத்தி மற்றும் கடத்தல் குறித்து ஐ.நா நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பலமுறை ஒடுக்குமுறை முயற்சிகள் இருந்தபோதிலும், கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு சட்டவிரோத போதைப்பொருட்களின் முக்கிய ஆதாரமாக இந்த நாடு நீண்ட காலமாக இருந்து வருகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



