ரஷ்யா செல்லும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்

அமெரிக்க ராணுவம் (இந்திய நேரப்படி இன்று அதிகாலை), ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகத் அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக ஈரான் அணுசக்தி கழகம் கண்டனம் தெரிவித்திருந்தது.
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து, போரில் அதிகாரப்பூர்வமாக இணைந்துவிட்டோம் என ஏமன் ராணுவம் அறிவித்துள்ளது.
செங்கடல் பகுதியில் உள்ள கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்த உள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏமன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் செய்யத் அப்பாஸ் அரக்சி, ரஷியா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்தான்புல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர், "நாளை ரஷிய அதிபர் புதினை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளேன். ரஷியாவுடன் இணைந்து செயல்படுவோம்" என்று தெரிவித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



