2024 (2025) ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
#SriLanka
#Examination
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
4 hours ago

2024 (2025) ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படுவது தொடர்பாக கல்வி அமைச்சு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
2024 (2025) ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (21) நள்ளிரவில் வெளியிடப்படும் என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று நள்ளிரவில் தொடர்புடைய பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று நள்ளிரவில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படாது என்றும், பெறுபேறுகள் வெளியிடப்படும் என சமூக ஊடகங்களில் பகிரப்படும் அனைத்து செய்திகளும் தவறானவை என்றும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



