இந்திய பிரதமர் குறித்து இத்தாலி பிரதமர் புகழாரம்

கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியும், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இதற்கிடையில், பிரதமர் மெலோனி பிரதமர் மோடியிடம், “நீங்கள் சிறந்தவர். நான் உங்களைப் போலவே இருக்க முயற்சிக்கிறேன்” என்று மெலோனி தெரிவித்துள்ளார்.
இத்தாலிய பிரதமர் X இல் ஒரு படத்தை வெளியிட்டு, “இத்தாலியும் இந்தியாவும், ஒரு சிறந்த நட்பால் இணைக்கப்பட்டுள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி இந்தப் பதிவை மீண்டும் பகிர்ந்து கொண்டு, “பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, உங்களுடன் முழுமையாக உடன்படுகிறேன். இத்தாலியுடனான இந்தியாவின் நட்பு தொடர்ந்து வலுவடையும், இது நமது மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, உயர்மட்டக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி கனடாவில் உள்ள பொமராய் கனனாஸ்கிஸ் மலை லாட்ஜுக்கு வந்தார். ஆல்பர்ட்டாவின் கனனாஸ்கிஸில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டின் இடத்திற்கு பிரதமர் மோடி வந்தபோது, கனேடிய பிரதமர் மார்க் கார்னி அவரை வரவேற்றார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



