ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜோஹன் வடேபுலை சந்தித்த ஜனாதிபதி!

ஜெர்மனி கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இன்று (11) பிற்பகல் பேர்லினில் உள்ள வால்டோர்ஃப் அஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜோஹன் வடேபுலை சந்தித்து கலந்துரையாடினார்.
அரசாங்க முன்னுரிமைகளின் அடிப்படையில் வர்த்தகம், டிஜிட்டல் பொருளாதாரம், முதலீடு மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகள் உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான புதிய வழிகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், ஜெர்மனிக்கான இலங்கைத் தூதர் வருணி முத்துக்குமரனா, இலங்கை முதலீட்டு வாரியத்தின் தலைவர் அர்ஜுன ஹேரத், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தக அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா) சுகீஸ்வர குணரத்ன மற்றும் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



