பேருவளையில் காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய கும்பல்!
#SriLanka
#Police
#Attack
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
11 months ago
பேருவளை பகுதியில் ஒரு குழுவினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் பேருவளை காவல்துறை குற்றப்பிரிவு காவல்துறை பொறுப்பதிகாரி உட்பட மூன்று காவல்துறை அதிகாரிகள் காயமடைந்து நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் கொடிகளை அசைத்துக்கொண்டிருந்த ஒரு குழுவிற்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததை அடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
