நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
#SriLanka
#landslide
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
10 months ago
நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, காலி மாவட்டத்தின் எல்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவுகள், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர, கங்கை இஹல கோரல, கண்டி மாவட்டத்தின் பஸ்பகே கோரள மற்றும் கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, புலத்கொஹுபிட்டிய, யட்டியந்தோட்டை மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேசங்களை அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணி முதல் நாளை காலை 10 மணி வரை இந்த எச்சரிக்கை அறிவிப்பு அமலில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
