10 வாரங்களுக்குப் பிறகு காசா பகுதிக்கு அடிப்படை உணவுப் பொருட்களை வழங்கும் இஸ்ரேல்!
#SriLanka
#world_news
#Israel
#Gaza
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
4 hours ago

10 வாரங்களுக்குப் பிறகு காசா பகுதிக்கு அடிப்படை உணவுப் பொருட்களை வழங்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, உதவி குழுக்கள் உணவு வழங்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசா பகுதியில் விரிவான தரைவழி நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதற்கிடையில், இஸ்ரேலிய தாக்குதல்களால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் காசா பகுதியில் 67 பேர் கொல்லப்பட்டதாகவும், 361 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார சேவைகள் குறிப்பிடுகின்றன.
காசா பகுதியில் அவசர சேவைகளை இயக்கும் சிவில் பாதுகாப்புப் படைகளின் கூற்றுப்படி, ஒரு இடம்பெயர்வு முகாமும் தாக்கப்பட்டது, இதில் 22 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 100 பேர் காயமடைந்தனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



