ரம்போடா கரடிஎல்ல விபத்து - பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!
#SriLanka
#Accident
#NuwaraEliya
Dhushanthini K
1 month ago

ரம்போடா கரடிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கரடிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களை அவசரமாக மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்திருந்த நிலையில், அவர்களில் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



