மாணவியின் மரணத்துக்கு நீதிக்கோரி மாணவர்கள் கொழும்பில் போராட்டம்
#SriLanka
#Colombo
#School
#Protest
#Abuse
#Lanka4
#School Student
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
6 months ago
16 வயதுடைய மாணவி டில்ஷி அம்ஷிகாவின் மரணத்துக்கு நீதிக்கோரி இன்று வெள்ளிக்கிழமை (09) மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக கொழும்பு, கொட்டாஞ்சேனை, ஜோர்ஸ் ஆர்டி சில்வா மாவத்தை வீதியில் இப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் நடை பவணியாக காலி முகத்திடலுக்கு செல்ல உள்ளார்கள்.
அங்கு மாலை 4 மணி வரை அமைதி போராட்டத்தை தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
