இங்கிலாந்தில் வங்கிக்குச் சென்ற இந்திய வம்சாவளி ஒருவர் குத்திக்கொலை
#Death
#Murder
#Bank
#England
#Indian
Prasu
1 month ago

இங்கிலாந்திலுள்ள Derby நகரில், உணவகம் ஒன்றை நடத்திவந்தவர், இந்திய வம்சாவளியினரான குர்விந்தர் சிங் ஜோஹல் (37).
வங்கிக்குச் சென்றிருந்த ஜோஹலை, Haybe Nur Cabdiraxmaan (47) என்னும் சோமாலியா நாட்டவர் கத்தியால் குத்தியுள்ளார். இந்த தாக்குதல் எதனால் நிகழ்ந்தது என்பது குறித்த எந்த விவரமும் வெளியாகவில்லை.
தகவலறிந்து பொலிசாருடன் வந்த மருத்துவ உதவிக்குழுவினர் ஜோஹல் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
Haybe கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார். விசாரணை தொடர்கிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



