சீனாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் மரணம்
#China
#Death
#Accident
#fire
Prasu
2 months ago

சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள தாதிமை இல்லத்தின் மூண்ட தீ காரணமாக 20 பேர் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.ஆனால் தீச்சம்பவம் தொடர்பான விவரங்களை அது வெளியிடவில்லை.
ஹேபெய் மாநிலத்தில் செங்ட நகரில் உள்ள தாதிமை இல்லத்தில் தீ மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. தாதிமை இல்லத்தில் இருந்த மற்றவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவர்களது உடல்நிலை கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



