உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நிறைவு!
#SriLanka
#Election
Dhushanthini K
3 months ago

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (20) நிறைவடைகின்றன.
இன்று நண்பகல் 12:00 மணிக்குப் பிறகு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த 17 ஆம் திகதி தொடங்கியது.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும்.
இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வைப்புத்தொகை செலுத்தும் பணியும் நேற்று (19) நிறைவடைந்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




