400 அடி உயரத்தில் இருந்து விழுந்து இளைஞர் பலி : மாத்தளை பகுதியில் சம்பவம்!
#SriLanka
Thamilini
1 year ago
மாத்தளை -ஹுலங்கல பிசோயெல்ல அருகே உள்ள நீர்வீழ்ச்சியில் இருந்து சுமார் 400 அடி உயரத்தில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தெமட்டகொட பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞர் ஆவார்.
இறந்தவர் கடந்த 15 ஆம் திகதி இரவு சலகம தோட்டத்தின் ஹுலங்கல பகுதியில் நான்கு இளைஞர்களுடன் தங்கியிருந்தார்.
பின்னர், இந்தக் குழு நேற்று (16) காலை 7:00 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்தது. அந்த நேரத்தில் இறந்தவர் திடீரென ஓடத் தொடங்கி பின்னர் தாழ்வான காட்டுப் பகுதியில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இறந்த இளைஞனின் உடலின் பாகங்கள் காட்டுப் பகுதியில் சிதறிக் கிடந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மஹாவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
