காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை: யாழில் வர்த்தகர் ஒருவருக்கு 30 ஆயிரம் தண்டப்பணம்

#SriLanka #Jaffna
Mayoorikka
2 months ago
காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை: யாழில் வர்த்தகர் ஒருவருக்கு 30 ஆயிரம் தண்டப்பணம்

காலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவருக்கு 30 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. 

 திருநெல்வேலி பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் அண்மையில் பொது சுகாதார பரிசோதகர்கள் குழு திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். 

 அதன் போது வர்த்தக நிலையம் ஒன்றில் காலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த வர்த்தகர் ஒருவர் கண்டறியப்பட்டு, அவருக்கு எதிராக யாழ் . மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

 குறித்த வழக்கு விசாரணைகளை நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வர்த்தகர் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவரை கடுமையாக எச்சரித்த மன்று , 30 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1740549479.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!