பிரித்தானியாவில் ஆரம்ப பாடசாலை ஒன்றிற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்
#School
#England
#Bomb
#Threat
Prasu
11 months ago
பிரித்தானியாவின் ஸ்விண்டன் பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின், ஸ்விண்டன் வில்ட்ஷயரில் உள்ள பேட்பரி பார்க் தொடக்கப் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பள்ளியில் இருந்து மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
மதிய உணவு இடைவேளைக்கு சற்றுப் பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளி வளாகத்தை சுற்றி 200 மீட்டர் தடை மண்டலம் அமைக்கப்பட்டது.
பள்ளி உடனடியாக அவசர வெளியேற்ற நடைமுறைகளை செயல்படுத்தியதோடு, பெற்றோர்கள் உடனடியாக தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்
