சூரிய குடும்பத்தைச் சேர்ந்த ஏழு கோள்களை ஒரே சீரமைப்பில் வரும் அரிய நிகழ்வு!
#SriLanka
Dhushanthini K
2 months ago

சூரிய குடும்பத்தைச் சேர்ந்த ஏழு கோள்களை ஒரே சீரமைப்பில் காணக்கூடிய ஒரு அரிய வானக் காட்சி தற்போது நடைபெற்று வருகிறது.
இன்று முதல் 28 ஆம் தேதி வரை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இலங்கையில் இருந்து இந்தக் காட்சியை மிகவும் தெளிவாகக் காண முடியும் என்று ஆர்தர் சி. கிளார்க் இன்ஸ்டிடியூட் ஃபார் அட்வான்ஸ்டு டெக்னாலஜியின் தலைவர் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
பூமியைத் தவிர, சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கோள்களையும் இங்கு ஒரே பொதுவான பாதையில் காணலாம் என்று பேராசிரியர் சந்தன ஜெயரத்ன கூறினார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



