வித்தியாவின் ஆத்மா தண்டித்தது - 4 ஆண்டுகள் கடூழிய சிறை

#Arrest #Police #Murder #Rape
Prasu
4 months ago
வித்தியாவின் ஆத்மா தண்டித்தது - 4 ஆண்டுகள் கடூழிய சிறை

சப்ரகமுவ மாகாண SDIG லலித் ஜயசிங்கவுக்கு வவுனியா மேல் நீதிமன்றம் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமாரை தப்பிச் செல்ல உதவியமை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு பதிவாகிய சர்ச்சைக்குரிய சம்பவமான சிவலோகநாதன் வித்தியாவின் பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலை தொடர்பான வழக்கில் சுவிஸ் குமாரை கைது செய்யாமல் தப்ப உதவியதாக SDIG லலித் ஜெயசிங்க மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு மே மாதம் இலங்கையின் வடபகுதியில் உள்ள புங்குடுதீவு தீவில் 18 வயதுடைய சிவலோகநாதன் வித்தியாவின் பாடசாலை மாணவி கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

கொலையின் பிரதான சந்தேக நபரான மகாலிங்கம் சசிகுமார் புங்குடுதீவில் கிராம மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

எவ்வாறாயினும், மகாலிங்கம் சசிகுமார் அல்லது சுவிஸ் குமாரின் விடுதலைக்கு ஏற்பாடு செய்ததாக SDIG லலித் ஜயசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!