வரவு செலவு திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள துணை மருத்துவ பயிற்சியாளர்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
#SriLanka
#budget
Dhushanthini K
4 months ago

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சுகாதார ஊழியர்களின் கொடுப்பனவுகளைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக துணை மருத்துவ பயிற்சியாளர்களின் கூட்டு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் துணை மருத்துவ பயிற்சியாளர்களுக்கு பொறுப்பான அமைச்சருக்கு இது தொடர்பில் விவாதிக்க ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய கலந்துரையாடலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோம் என்று துணை மருத்துவ பயிற்சியாளர்களின் கூட்டு கூட்டமைப்பின் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



