மின்சார தேவையை பூர்த்தி செய்ய சூரிய சக்தியைக் கட்டுப்படுத்தும் நோக்கம் இல்லை!
#SriLanka
#ElectricityBoard
Dhushanthini K
4 months ago

நாட்டின் மின்சாரத் தேவையில் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்து பூர்த்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், சூரிய சக்தியைக் கட்டுப்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி கூறுகிறார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், எரிசக்திக் கொள்கையின்படி, விரைவில் தேசிய மின்சாரக் கட்டமைப்பில் 2000 மெகாவாட் மின்சாரம் சேர்க்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தவறான பிரச்சாரங்களைப் பரப்ப வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



