தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளை சந்திக்கும் NPP உறுப்பினர்கள்!
#SriLanka
#Election
#NPP
Thamilini
1 year ago
தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர்கள் இன்று (19) தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளை சந்திக்க உள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையத்துடன் கலந்துரையாடல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் நேற்று (18) பிற்பகல் சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு எவ்வாறு தயாராவது என்பது குறித்து விவாதித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்