தேநீர் முதல் கொத்துவரை அனைத்து உணவுகளின் விலையும் அதிகரிப்பு!
#SriLanka
#prices
#Food
Dhushanthini K
4 months ago

இலங்கையில் உள்ள அனைத்து உணவகங்களிலும் இன்று (17.02) நள்ளிரவு முதல் உணவுகளின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஒரு கப் சாதாரண தேநீரின் விலை 5 ரூபாயும், ஒரு கப் பால் தேநீரின் விலை 10 ரூபாயும், பிரைட் ரைஸ் மற்றும் கொத்துவின் விலை 30 ரூபாயும், ஷோர்டீஸின் விலை 10 ரூபாயும் அதிகரிக்கும் என்று அச்சங்கத்தின் தலைவர் ஹர்ஷனா ருக்ஷன் தெரிவித்தார்.
சமீபத்திய பட்ஜெட்டில் உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு எந்த சலுகைகளும் வழங்கப்படாத நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



