05 மாவட்டங்களை வாட்டி வதைக்கும் வெப்பநிலை : மக்களுக்கு எச்சரிக்கை!
#SriLanka
#weather
#heat
Dhushanthini K
4 months ago

இலங்கையில் வெப்பநிலையானது 05 மாவட்டங்களில் எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், முடிந்தவரை நிழலான பகுதிகளில் ஓய்வெடுக்கவும், தூங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



