வாகனங்களை கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு!
#SriLanka
#vehicle
Thamilini
9 months ago
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு முன்னதாக பணம் செலுத்த வேண்டாம் என வாகன இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜப்பானில் இருந்து புறப்பட்டுள்ள கப்பல் விரைவில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும் எனவும், வாகனங்களை இறக்குமதி செய்யும் போது ஜப்பானிய வங்கிகள் இலங்கை வங்கிகளின் கடனுதவி கடிதங்களை ஏற்றுக் கொள்வதில்லை என்ற வதந்திகளில் உண்மையில்லை எனவும் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
எனவே வாடிக்கையாளர்கள் ஜப்பான், ஐரோப்பா, தாய்லாந்து, துபாய் போன்ற நாடுகளில் இருந்து வாகனங்களை வாங்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்