விபத்துக்குள்ளான நிலையில் தீப்பிடித்து எரிந்த கார் : கொழும்பில் சம்பவம்!
#SriLanka
#Colombo
#Accident
Dhushanthini K
4 months ago

கொழும்பில் இருந்து கொஹுவல நோக்கி பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளாகிய நிலையில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று (17.02) அதிகாலை பாமன்கடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
28 வயதான யுவதி ஒருவர் ஓட்டிச் சென்ற கார் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான நிலையில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



