இலங்கையில் முடங்கவுள்ள முக்கிய திணைக்களம் ஒன்று
#SriLanka
#Protest
#strike
Dhushanthini K
4 months ago

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உதவி பொறியியல் அதிகாரிகள் இன்று (17) மற்றும் நாளை (18) ஆகிய நாட்களில் சுகயீன விடுமுறையில் சமூகமளிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.
பதவி உயர்வு முறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கோரி இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக நீர்ப்பாசனத் துறை உதவி பொறியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நிரோஷன் சில்வா தெரிவித்தார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



