லசந்த விக்ரமதுங்க விவகாரம்: சட்டமா அதிபர் ஆலோசனை கடிதத்தை திரும்பப் பெறவில்லை

#SriLanka
Mayoorikka
4 months ago
லசந்த விக்ரமதுங்க விவகாரம்: சட்டமா அதிபர் ஆலோசனை கடிதத்தை திரும்பப் பெறவில்லை

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் சாரதி கடத்தப்பட்டமை மற்றும் லசந்தவின் கள நோட்புக் காணாமல் போனமை தொடர்பான மூன்று சந்தேக நபர்களை விடுவித்த ஜனவரி 27ஆம் திகதியன்று அனுப்பப்பட்ட தனது ஆலோசனைக் கடிதத்தை சட்டமா அதிபர் (AG) திரும்பப் பெறவில்லை என்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 சட்டமா அதிபர் தனது முந்தைய ஆலோசனைக் கடிதத்தை வாபஸ் பெற்றதாகக் கூறும் ஊடக அறிக்கைகளை அந்த வட்டாரங்கள் மறுத்துள்ளன.

 போதுமான ஆதாரங்கள் கிடைத்தால், புதிய ஆவணங்களைக் கருத்தில் கொண்டு சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் எந்தத் தடையும் இல்லை என்று சட்டமா அதிபர் CID-க்குத் தெரிவித்ததாக அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!