தமிழகத்தில் வெளிவரவுள்ள ஈழத்து எழுத்தாளர் தன.ரஜீவனின் பாடல்
#India
#SriLanka
#Lanka4
#Song
Prasu
1 year ago
ஈழத்தின் பிரபல பாடலாசிரியர், ஈழத்து எழுத்தாளர் தன.ரஜீவனின் வரிகளில் உருவாகிய "கள்ள சிரிப்பு களவாணி" பாடல் இறுவட்டு எதிர்வரும் மாதம் (March) தமிழகத்தில் வெளியாகவுள்ளது.
இப்பாடலானது, சுகிதநிலா யூடியூப் தளத்தின் தயாரிப்பில் வெளிவரவுள்ளதோடு பாடலுக்கான இசையை அக்னி கணேஷ் (இந்தியா) அவர்கள் வழங்க, கோபாலகிருஷ்ணன் சியாமளாதேவி. (இந்தியா) ஆகியோர் பாடியுள்ளனர்.

இப் பாடலாசிரியர் பல வெற்றிப்பாடல்களை தந்தவர் என்பதோடு, தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கான பாடலை எழுதியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
"கள்ள சிரிப்பு களவாணி" பாடலானது பெரு வெற்றியை தருமென அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்