எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு!
#SriLanka
#Fuel
Mayoorikka
4 months ago

எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பான நிலைப்பாடு இன்று அறிவிக்கப்படும் என நிதி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலக சந்தை விலைகளுக்கு ஏற்ப நாட்டின் எரிவாயு விலையைத் திருத்துவதற்கான கோரிக்கையை லிட்ரோ சமர்ப்பித்துள்ளதாகத் தேசிய செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
லிட்ரோ நிறுவனத்தின் திருத்தத்திற்கு ஏற்ப புதிய விலைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



