பென்சில்வேனியாவில் ஒரு லட்சம் முட்டைகளை திருடிய கும்பல்

#America #Egg #Robbery
Prasu
1 year ago
பென்சில்வேனியாவில் ஒரு லட்சம் முட்டைகளை திருடிய கும்பல்

அமெரிக்காவில் முட்டை பற்றாக்குறை இருந்து வருகிறது. பறவை காய்ச்சல் காரணமாக லட்சக்கணக்கான கோழிகள் கொல்லப்பட்டதால் முட்டைக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஒரு டஜன் பெரிய முட்டைகள் தற்போது 7.08 அமெரிக்க டாலராக உள்ளது. இது 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலையை விட 7 மடங்கு அதிகம் என்று அமெரிக்க வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பென்சில்வேனியாவில் ஒரு விநியோக மையத்தில் இருந்து ஒரு லட்சம் முட்டைகளை கும்பல் ஒன்று திருடி சென்றுள்ளது.

இதன் மதிப்பு 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். இந்த திருட்டு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4