அர்த்தமுள்ள மாற்றத்திற்கு நாம் அனைவரும் கைக்கோர்க்க வேண்டும் - பிரதமர் அழைப்பு!

உண்மையான சுதந்திரம் என்பது நமது நாட்டின் இறையாண்மை மட்டுமல்ல, ஒவ்வொருவரின் கண்ணியத்துடனும், நீதியுடனும், ஒடுக்குமுறையிலிருந்து விடுபட்டு வாழ்வதற்கான உரிமையும் கூட என்று பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய கூறுகிறார்.
உண்மையான சுதந்திரத்தை அடைய, இனம், மதம், சாதி, கோத்திரம், பாலினம் அல்லது வர்க்கம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான சூழல் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் பிரதமர் தனது சுதந்திர தினச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
"வளமான நாடு, அழகான வாழ்க்கை" என்பதை வெறும் வார்த்தைகளால் மட்டும் கட்டுப்படுத்தாமல், செயல் மூலம் நிரூபிக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். இது நடக்க வேண்டுமென்றால், சரியான முடிவுகளை எடுப்பது என்ற கடினமான பணியை, ஜனநாயக ரீதியாக பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து, அனைவரின் கருத்துகளையும் கேட்பதன் மூலம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு, அவர்கள் மதிப்புமிக்கவர்களாக உணரக்கூடிய வகையில் வாழக்கூடிய ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதாக அரசாங்கம் மக்களுக்கு உறுதியளிக்கிறது என்று பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய கூறுகிறார்.
பிரதமர் தனது சுதந்திர தின செய்தியில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் அனைத்து வேறுபாடுகளையும் கடந்து அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து கைகோர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



