சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இஞ்சியுடன் நால்வர் கைது!

#SriLanka #Arrest
Dhushanthini K
4 months ago
சட்டவிரோதமாக இறக்குமதி  செய்யப்பட்ட இஞ்சியுடன் நால்வர் கைது!

சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இஞ்சித் தொகையுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 இந்த சந்தேக நபர்கள் இன்று (01) காலை கல்பிட்டி காவல் நிலைய அதிகாரிகள் குழுவினால் கல்பிட்டி காவல் பிரிவின் கண்டகுடாவ பகுதியில் கைது செய்யப்பட்டனர். 

 அவர்களிடம் இருந்து 1,839 கிலோகிராம் இஞ்சி கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மதுரங்குளிய மற்றும் புத்தளம் பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும், அவர்கள் 18, 34, 37 மற்றும் 44 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 சம்பவம் தொடர்பில் கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பொதுமக்களுடைய நன்மை கருதி 
லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!