தமிழ் அரசியல் வரலாற்றில் பெரும் சரித்திரம் மாவை!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காலமானார்.
தமிழ் மக்கள் மீதும் தமிழ்த் தேசியத்தின் மீதும் தன் இறுதி மூச்சு உள்ளவரை தீராத பற்றுக் கொண்ட அவற்றுக்காகவே வாழ்ந்து மடிந்தவர் மாவை சேனாதிராஜா. இவர் தனது 82 ஆவது வயதில் நேற்று இரவு காலமானார். பாரம்பரியமான தமிழரசுக் கட்சியின் முதுபெரும் தலைவர் மாவை சேனாதிராஜா இன்று விடைபெற்றுச் செல்கிறார்.
இவர் 1942 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் திகதி பிறந்தவர். யாழ்ப்பாணம். மாவட்டபுரத்தை சொந்த இடமாக கொண்டவர் . மாவட்ட புரத்தில் பிறந்தவர் என்பதால் சேனாதிராயர் தனது பெயருடன் முன்னிணைப்பாக மாவை என்ற சொல்லை சேர்த்துக்கொண்டார். அந்த கிராமத்தின் கந்தசாமி கடவுள் மாவை கந்தன் என்று அழைக்கப்படுவதை போன்று மாவை சேனாதராஜாவும் மாவட்ட புரத்தின் மிகவும் பிரபலமான பிரதிநிதியாகவும் விளங்குகிறார்.
பலர் அவரை எளிதாக சேனாதி அல்லது மாவை அல்லது மாவை அண்ணன் என்று அழைக்கிறார்கள். இவர் தனது இளமை கல்வியை வீமன் காமம் பாடசாலையிலும் நடேஸ்வரா கல்லூரியிலும் இளம் கல்வி கற்ற பின்னர் இலங்கை பல்கலைக்கழகத்தில் வெளி வாரி மாணவராக இருந்து இளங்கலை பட்டம் பெற்றார் ஸ்ரீ மா பண்டாரநாயகாவின் ஐக்கிய முன்னணி அரசாங்க காலத்தில் யாழ்ப்பாணத்தின் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெருமளவு அமைதியின்மை ஏற்பட்ட நாட்கள். கர்த்தால் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் மறியல் போராட்டங்கள் கருப்பு போராட்டங்கள் உண்ணாவிரதங்கள் என்ற அந்த காலகட்டத்தில் பெருவாரியான அரசியல் போராட்டங்கள் நடைபெற்றன அந்தப் போராட்டங்களில் முன்னணியில் இருந்து செயல்படும் இளைஞராக மாவை சேனாதிராஜா இருந்தார்.
இளம் வயதில் பல்வேறு போராட்டங்களில் கலந்து தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த இன வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்த மாவை 1973 இல் கைது செய்யப்பட்டு 1977 இல் விடுதலை செய்யப்பட்டிருந்தார். சிறை சென்றதால் பல்கலைக்கழக கல்வியை தொடர முடியாத நிலை ஏற்படவே, வெளிவாரி சட்டத்துறை கற்கையை தொடர இயலாமல் இடை விலகினர் சிறையில் இருந்து விடுதலை பெற்ற பின்னர் 1978ல் இந்தியாவிற்கு சென்றவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று பட்டத்தையும் பெற்றார். இவர் தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிகளுக்காக சிறு வயது முதலே கிளர்ந்து எழுந்த பல்வேறு அகிம்சைப் போராட்டங்களில் பங்கெடுத்தார்.
தந்தை செல்வா தமிழர் மக்களுக்காக நடத்திய சத்தியாகிரக போராட்டங்களின் போது உடனிருந்து செய்யப்பட்டவர். 11 தடவைகள் கைது செய்யப்பட்டு மொத்தமாக ஏழு ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்தார் வாலிப முன்னணியின் செயலாளராகவும் இளைஞர் பேரவையின் செயலாளராகவும் இளம் வயதில் செய்யப்பட்டவர்.
தமிழரசு கட்சியின் உறுப்பினராகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினராகவும் தொடர்ந்தும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. சேனாதிராஜா 1981இல் நாடாளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு கூட்டணி வேட்பாளர்களில் 13 ஆவதாக வந்து தோல்வி அடைந்தார்.
ஆனாலும் அமிர்தலிங்கம் 1989 ஜூலை 13ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டவை அடுத்து அவரின் இடத்திற்கு சேனாதிராஜா தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். 1999 இல் மீண்டும் பேசிய பட்டியலின் மூலம் நாடாளுமன்றம் சென்றார் 2000 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் 2001, 2004, 2019 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
செப்டம்பர் 2014 இல் சேனாதிராஜா இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்காட்சி முரண்பாடுகள் மற்றும் வாக்கு வீழ்ச்சியால் மாவை சேனாதிராஜா தோல்வி கண்டார். இது அவரது நீண்ட அரசியல் பயணத்தில் ஒரு முக்கியமாக இலங்கை தமிழரசு கட்சியின் மிக நெருக்கடியான காலகட்டங்களில் தலைவராக பணியாற்றிய கட்சியை கொண்டு செல்வதற்கு பல்வேறுப்பட்ட முயற்சிகளை மேற்கொண்ட ஒரு உன்னதமான நபர் அவர்.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக செயலாற்றிய பகாலப் பகுதியில் கட்சியின் அடிப்படை கொள்கைகளில் இருந்து வேறுபட்ட பல கொள்கைகள் சார்ந்து செயற்பட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு அளித்ததுடன் கட்சியின் முடிவுகளை மீறி மீண்டும் செயல்பட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருந்தார். அவர் 2000ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக 20வருடங்கள் பாராளுமன்றத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்து வந்தார்.
வழமையாக நீண்ட கால அனுபவம் கொண்ட அரசியல் தலைவர் ஒருவர் தேர்தலில் தோல்வி கண்டபிறகு அரசியல் அமலி ஏற்படுகிறது. மாவை விடுதலைபுலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்கவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். செப்டம்பர் , 2014இல் சேனாதிராஜா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
2024, பொதுத்தேர்தலின் பின்னர் கட்சியில் சிலருடைய கருத்து முரண்பாட்டால் தலைவர் பதவியில் இருந்து தான் விலகவுள்ளதாகவும் அந்த பதவியை 2024, ஜனவரி,21, ல் ஜனநாயக ரீதியாக தெரிவாக சிவஞானம் சிறிதரனை தலைவராக பதவி வகிக்குமாறும், கடிதமூலம் கோரியிருந்தார். சிறிதரன் தொடர்ந்தும் அடுத்த மாநாடு வரை நீங்களே தலைவராக இருங்கள் என கூறியதை ஏற்றிருந்தார்.
எனினும் சிறிதரனுக்கு தான் வழங்கிய கடிதப்பிரதியை பதில் பொதுச்செயலாளர் ப. சத்தியலிங்கத்துக்கு அனுப்பியபின்னர். 2024, டிசம்பர்,14 அன்று வவுனியாவில் நடைபெற்ற மத்தியகுழு கூட்டத்தில் மாவை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானம் எடுக்க முற்பட்ட வேளையில் கருத்து முரண்பாடுகள், ஏற்பட்டன.
தாம் தொடந்தும் தலைவராக செயல்பட போவதாக அவர் மனம்விட்டு கேட்டபோதும் மத்தியகுழுவில் உள்ள ஒரு சாரார் விரும்பவில்லை.
ஆனாலும் சுமார் 24 வருடங்களாக தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவி என்ற சக்திவாய்ந்த பதவியை வைத்துக்கொண்டு நீண்டகாலம் பயணித்தவர் என்பதில் ஐயமில்லை.
இந்த செய்தியை ஒலிவடிவில் கேட்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



