உடுப்பிட்டி மதுபான சாலை வழக்கு மார்ச் மாததிற்கு தவணை!

#SriLanka #Court Order
Mayoorikka
4 months ago
உடுப்பிட்டி மதுபான சாலை வழக்கு  மார்ச் மாததிற்கு தவணை!

உடுப்பிட்டி மதுபான சாலை தொடர்பான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டுக்கு தவணையிடப்பட்டுள்ளது. 

 உடுப்பிட்டி பகுதியில் திறக்கப்பதத்டுள்ள மதுபான சாலையை அகற்றக்கோரி பிரதேச மக்களால் தொடரப்பட்ட வழக்கு இன்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றில் இடம் பெற்றது. 

இந்நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி எம் ஏ சுமந்தின் குறித்த வழக்கில் ஆஜராகியிருந்தார். குறித்த வழக்கு எதிர்வரும் 06/03/2025 க்கு தவணையிடப்பட்டுள்ளது.

 பருத்தித்துறையில் மரக்கறி வியாபாரிகளால் மரக்கறி சந்தையை புதிய இடத்திற்க்கு மாற்றுவதை எதிராக தொடர்ப்பட்ட வழக்கு இன்று அழைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 07 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டுக்கு தவணையிடப்பட்டுள்ளது.

 இவ்வழக்கில் வழக்கு தொடருனர்கள் சார்பில் சிரேஸ்ர சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆஜராகியிருந்தார். குறித்த மரக்கறி சந்தை தொடர்பான வழக்கு எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் (31)ஆம் திகதி அன்று தவணையிடப்பட்டிருந்த நிலையில் நகர்த்தல் பத்திரம் மூலம் இன்று (29) இடம்பெற்றிருந்தது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!