வானில் தோன்றும் 06 கிரகங்கள் : அரிய காட்சியை காண இலங்கையர்களுக்கு வாய்ப்பு!

#SriLanka #Colombo
Dhushanthini K
4 months ago
வானில் தோன்றும் 06 கிரகங்கள் : அரிய காட்சியை காண இலங்கையர்களுக்கு வாய்ப்பு!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் இயக்குநர் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன  , 6 கிரகங்களின் அரிய சீரமைப்பு தற்போது வானில் காணப்படுவதாகக் கூறுகிறார்.

வீனஸ், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கிரகங்களை ஒரே பொதுவான பாதையில் காண முடியும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இன்றைய நாட்களில், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு 90 நிமிடங்களுக்குள் அந்தக் கோள்களை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்று பேராசிரியர் சந்தன ஜெயரத்ன கூறினார்.

"இப்போதெல்லாம், இரவு வானில் ஒரு கிரக அணிவகுப்பைக் காண உலகம் வாய்ப்பு பெற்றுள்ளது. இலங்கையில் உள்ள நாமும் அதைக் காணலாம். 

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “புதன் கிரகம் தெரியவில்லை. அடுத்து, வீனஸ், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவை தெரியும்." . இவற்றில், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவற்றைப் பார்க்க ஒரு தொலைநோக்கி தேவை. மற்ற நான்கு கிரகங்களும் வெறும் கண்ணுக்குத் தெரியும்.

 அவற்றைப் பார்ப்பதற்கு சிறந்த நேரம் ஜனவரி 29 ஆம் திகதிக்கு முன், சூரிய அஸ்தமனத்திற்கு 90 நிமிடங்களுக்குள்” பார்வையிட முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்




உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!