மீனவர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிடும் அரசாங்கம்!
#SriLanka
Dhushanthini K
5 months ago

மீனவர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்பிடித்துறை பிரதி அமைச்சர் ரத்ன கமகே கூறுகிறார்.
இதற்கு ஒரு காப்பீட்டு நிறுவனம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளதாகவும், வரவிருக்கும் பட்ஜெட்டுக்குப் பிறகு மீனவர்களுக்கு இந்தக் காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
காலி பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மொத்த மற்றும் பகுதி சொத்து சேதம் மற்றும் உயிர் இழப்பு ஏற்பட்டால் சலுகைகள் வழங்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



