உச்ச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார் ஹர்ஷ இலுக்பிட்டிய!
#SriLanka
Dhushanthini K
5 months ago

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவை சிறைச்சாலை அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இ-விசாக்கள் வழங்குவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவுகளை அமல்படுத்தத் தவறியதற்காக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் அவர் காவலில் வைக்கப்பட்டார்.
இந்த மனுக்கள் இன்று (22) உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளன, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திரு. ஹர்ஷ இலுக்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.



