யாழ் - வல்வெட்டித்துறை, ஆதி கோவிலடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!
#SriLanka
#Jaffna
Mayoorikka
10 months ago
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை, ஆதி கோவிலடி கடற்கரையில் மிதவை ஒன்று இன்று முற்பகல் கரையொதுங்கியுள்ளது.
கடலில் நிலவும் கடும் காற்றால் குறித்த மிதவை கரையொதுங்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
கரையொதுங்கிய மிதவையை பொது மக்கள் பலர் பார்வையிட்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளிலும் மிதக்கும் கூடாரங்கள், மிதவைகள், புத்த சமய வீடு போன்றன கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இதனை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்