இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய நியமனம்!
#SriLanka
Mayoorikka
5 months ago

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க ஸ்ரீநாத் அபேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரிவு 17 (1) இன் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது
மேலதிக செய்திகளை அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



