மாவடிச்சேனை - நல்லூர் பாடசாலை சேவை பேருந்தில் மோசடி

நல்லூர்-மூதூர் பயணிகள் சேவை புரியும் WP NC2742 பேருந்துந்தில் 11km +11km=22km 100ரூபாய் அறவிடப்படுகின்றது அத்தோடு பயணிகளையும் ஏற்றி செல்கிறார்கள்.
இதற்கு இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக்கல்லூரி அதிபர் மற்றும் நல்லூர் அ.த.க பாடசாலை அதிபர் இருவரும் இலஞ்சம் வாங்குவதாலோ இந்த விடையத்திற்கு உடந்தையாக செயற்படுகிறார்கள்.
நல்லூர் பாடசாலைக்கு குறைவான மாணவர்கள் செல்கிறார்கள் ஆனால் அதிக மாணவர்கள் செல்வது போல் பேருந்து மாணவர்கள் அறிக்கையில் கள்ள கையொப்பம் இட அதிபர் உடந்தையாக செயல் படுகிறார்கள்.
இலங்கையில் பாடசாலை முடிவடையும் நேரம் 01.30 மணி ஆனால் 12.45/01.00 வருவதால் அந்த வழியாக செல்லும் இன்னும் ஒரு பேருந்துக்கும் இடையில் பாடசாலை சேவை கொடுக்க பட்டதில் இருந்து இன்று வரை பிரச்சனையாக உள்ளது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பேருந்து சேவையில் இடம்பெற்று 07 மாதங்களில் பாடசாலை சேவை உரிமையாளர் மற்றைய பேருந்து உரிமையாளரை 06 முறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். காரணம் அரசியல், பொலிஸ் செல்வாக்கு அத்தோடு அந்த உரிமையாளர் பெண் என்பதாலும்.
பாடசாலை சேவை தொடங்கி 07 மாதங்களில் 03 சாரதிகளும் 05 நடத்துனர்களும் மாற்ற பட்டுள்ளனர் பாடசாலை மாணவிகளுடன் பிரச்சனை என்பதனாலுமே. இதற்கு தகுந்த சட்ட நடவடிக்கை பெற்று தருமாறு பெற்றோர்கள் சார்பாக வேண்டி நிற்கின்றோம்
இதுதொடர்பான மேலதிக தகவல்களை அறிவதற்கு இந்த இணைப்பினை கிளிக் செய்யவும்



