கலகொடஅத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த பிணை கோரிக்கை நிராகரிப்பு!
#SriLanka
#Court Order
#HighCourt
Dhushanthini K
5 months ago

பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்திருந்த பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாத்தை அவமதித்ததற்காக ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் ஜாமீனில் விடுதலை செய்யுமாறு கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு இன்று (09.01) கொழும்பு கூடுதல் நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.



