ஒரு இலட்சம் பேர் நாட்டிற்குள் சட்டவிரோதமாக வரும் அபாயம்!

#SriLanka
Dhushanthini K
5 months ago
ஒரு இலட்சம் பேர் நாட்டிற்குள் சட்டவிரோதமாக வரும் அபாயம்!

சமீபத்தில் இலங்கைக்குள் 100க்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்கள் நுழைந்ததை அடுத்து, வரும் நாட்களில் சுமார் 100,000 சட்டவிரோத குடியேறிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான திட்டம் இருப்பதாக புலனாய்வு சேவைகள் வெளிப்படுத்தியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

இந்த விவகாரம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்த அமைச்சர், இது ஒரு பாரதூரமான சமூகப் பிரச்சினையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

சமீபத்தில் இலங்கைக்குள் நுழைந்த ரோஹிங்கியாக்கள் குழு மனித கடத்தல்காரர்களுக்கு 5 மில்லியன் டாலர்கள் மற்றும் பயணத்திற்காக 8 மில்லியன் டாலர்களை செலுத்தியதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார். 

 இந்த விவகாரம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அந்த மக்கள் குழு அகதிகளாகக் கருதப்பட்டால், அவர்கள் சர்வதேச சட்டங்களின்படி கையாளப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!