யாழில் உடனடியாக நடவடிக்கை எடுத்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை! குவியும் பாராட்டு
#SriLanka
Mayoorikka
5 months ago

அராலி பாலத்தில் இருந்து அராலி துறைக்கு செல்லும் வீதியில் உள்ள மதகு ஒன்று பாரிய சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.
குறித்த வீதியானது வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரித்தான வீதியாக காணப்படுகிறது. அத்துடன் 789 வழித்தட பேருந்து பயணிக்கும் பிரதான வீதியாக இந்த வீதி காணப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கவனத்து கொண்டு செல்லப்பட்டதுடன், இந்த வீதியின் ஊடகங்களில் செய்திகளும் வெளியாகி இருந்தன.
இவ்வாறான பின்னணியில் விரைந்து செயற்பட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் குறித்த குழியை நிரவி, அந்த மதகில் இருந்த குழியை சீர் செய்தது, பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தினர்.
இவ்வாறு விரைந்து நடவடிக்கை எடுத்த வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு மக்கள் தமது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.



