சாரதி அனுமதி பத்திரங்களுக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவித்தல்!
#SriLanka
#Driver
Thamilini
11 months ago
அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், நிறுவனத்தில் குவிந்துள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களை ஒரு மாதத்திற்குள் அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்தார்.
அதன்படி அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ள சுமார் 1,30,000 சாரதி அனுமதிப்பத்திரங்களை ஜனவரி மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர பிரதேசத்தில் அவசர பரிசோதனை விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.